வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த கனேடிய முக்கியஸ்தர்!
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கும், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ்-க்கு இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது, இன்றையதினம் (10-01-2024) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கனடாவில் இருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை தொடர்பில் ஆளுநர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
மேலும், வடக்கில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள பசுமை சக்திவள திட்டங்கள் , பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.