கனடாவிற்கு பெற்றோரை அழைக்க காத்திருந்தவர்களுக்கு அரசாங்கம் கொடுத்த ஷாக் ; இனி முடியாதா?
கனடாவில் வசிக்கும் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள், தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டிகளை அனுசரணை செய்து நிரந்தரமாக தம்முடன் அழைத்து வருவதற்கான Parents and Grandparents Program திட்டத்தில் புதிய விண்ணப்பங்களை ஏற்பதை கனடா அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குடியேற்ற அமைப்பைச் சீரமைக்கவும், சமநிலையான நடைமுறைகளை உருவாக்கவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

புதிய விண்ணப்பங்கள்
இந்த திட்டத்தின் கீழ் இனி வரும் காலங்களில் புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு, பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்களின் செயல்முறைகள் வழக்கம் போலத் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியேற்ற அமைப்பில் நீடித்த நிலைத்தன்மையை உருவாக்கவும், திட்டத்தை மறுசீரமைக்கவும் இந்த இடைவெளி தேவைப்படுவதாக கனேடிய அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
இதேவேளை, கனேடிய அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு குறித்து, கருத்துரைத்துள்ள குடியேற்ற ஆலோசகர்கள், "இத்திட்டம் அன்புக்குரியவர்களை அழைத்து வரக் காத்திருக்கும் பல குடும்பங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும்," என தெரிவித்துள்ளனர்.