சுவிஸ்லாந்திலுள்ள வவுனியா நண்பியை பார்க்க வந்தவருக்கு நேர்ந்த கதி
சுவிஸ்லாந்தில் உள்ள வவுனியா நண்பியை பார்க்க வந்த நண்பனை மர்ம நபர்கள் தாக்கியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தனது கணவர்தான் காரணம் என பொலிஸாரிடம் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா தோனிக்கல் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் 7 வயது மகனுடன் விவாகரத்தான நிலையில் 7 வருட காலமாக சுவிஸ்லாந்து சுவிச் நகரில் வாழ்ந்து வருகின்றார்.
இந்த பெண்ணுக்கு கனடாவில் இவர் 3 பிள்ளைகளின் தந்தையான பாடசாலை நண்பன் ஒருவர் இருக்கிறார்.
மர்ம நபர்கள்
அவர் தனது நண்பியை பார்ப்பதற்காக கனடாவிலிருந்து சுவிஸ்லாந்து வருகை தந்துள்ளார்.
அந்த பாடசாலை நண்பனுடன் பெண்ணின் வீட்டில் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று அந்த பெண்ணின் வீட்டிற்று 04 மர்ம நபர்கள் வந்து வீட்டிலிருந்த பெண்ணையும் அவரின் நண்பனையும் தாக்கியுள்ளனர்.
அதிஷ்ட வசமாக அந்த பெண்ணின் மகளுக்கு எந்த தாக்குதலும் இல்லை. தாக்குதலில் பெண்ணின் நண்பன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண்ணின் முறைப்பாடு
பெண்ணும் சிகிச்சை பெற்று கொண்டு பொலிஸாரின் முறைப்பாடு செய்துள்ளார்.
நான் என்னுடைய நண்பனை பார்ப்பதற்காக அழைத்திருந்தேன். என்னுடைய கணவர்தான் என்னை பலிவாங்குவதற்காக ஆட்களை அனுப்பி என்னுடைய நண்பனுக்கு அடித்துள்ளார் என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது அந்த பெண்ணின் கணவரின் உறவினர் தான் இதை நடத்திருக்க வேண்டும் என சந்தேகிக்கின்றனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணை தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பிரான்ஸில் இருந்து வந்தவர்களே பெண்ணின் நண்பனை தாக்கியுள்ளதாகவும் இது தொடர்பில் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.