இலங்கைக்கு வருமானத்தை குவிக்கும் கெலிப்சோ ரயில்!
இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, கெலிப்சோ ரயில் சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .
இலங்கை தேசிய சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே திணைக்களத்தினால் கெலிப்சோ ரயில் கடந்த (8) ஆம் திகதி புதிதாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நானுஓயாவிலிருந்து எல்ல வரையில் கெலிப்சோ ரயில் பயணிக்கும்.
கலிப்சோ ரயிலில் விசேட சிற்றுண்டிச்சாலை
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காக கொண்டு இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கலிப்சோ ரயிலில் விசேட சிற்றுண்டிச்சாலையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பயணத்திற்கென ஒரு சுற்றுலாப் பயணியிடம் 10,000 ரூபா அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் கொழும்பை வந்தடைவதற்காக நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் எனத் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
மேலும் புனித தலதா மாளிகை யாத்திரையை முன்னிட்டு நாளை மறுதினம் முதல் கொழும்பிலிருந்து கண்டிக்குத் தினமும் 8 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.