இலங்கையில் ஈரான் தூதரை தாக்கிய வர்த்தகருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தகர் இன்றையதினம் (22-05-2024) கொழும்பு கோட்டை நீதவான் கோசல சேனாதீர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 18ஆம் திகதி கொழும்பு 02 முத்தையா வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் இடம்பெற்ற சம்பவத்தின் போது ஈரான் தூதுவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 33 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.