பொலிஸ் அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த பேருந்து உரிமையாளர்
வெலிக்கடையில் பொலிஸ் போக்குவரத்து பிரிவில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.
நுகேகொடைக்கும், ஹெட்டியாவத்தைக்கும் சேவையில் ஈடுபடும் 176ம் இலக்க தனியார் பேருந்து ஒன்றின் உரிமையாளரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதிக்கு எதிராக அபராதம்
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் சாரதிக்கு எதிராக அபராதம் விதிப்பதற்கு குறித்த பொலிஸ் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை அதிகாரிக்கு பேருந்து நடத்துனராக கடமையாற்றிய அதன் உரிமையாளரினால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் அது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.
காணொளியின் அடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.