தமிழர் பகுதியில் தனியார் பேருந்து உரிமையாளரின் காட்டுமிராண்டித்தனம்; ஈவிரக்கமற்ற செயல்!
மட்டக்களப்பில் நடத்துநரை தனியார் பேருந்து உரிமையாளர் தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று அம்பலத்திற்கு வந்துள்ளது.
இச்சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் பகுதியில் நேற்று (7) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கட்டையால் தாக்கி சித்திரவதை
கல்முனை – மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்தில் நடத்துனராக அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கடமையாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பேருந்தில் இருந்து பணத்தை திருடியதாக நடத்துநர் மீது தனியார் பேருந்து உரிமையாளர் குற்றம் சுமத்தி, கடமையில் இருந்த இளைஞரை ஓந்தாச்சிமடம் பிரதான வீதியில் உள்ள பாழடைந்த காணியொன்றுக்குள் இழுத்துச் சென்று அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.
நடத்துன தாக்கப்படுவதை அவதானித்த பிரதேச மக்கள் அது தொடர்பில், பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் மரத்தில் கட்டிவைத்து அடித்தவரை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.