மனைவி மீது கொடூர தாக்குதல்; கணவர் கைது
மனைவி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை ஹப்புத்தளையில் இடம்பெற்றுள்ளது.
ஹப்புத்தளை உணவகம் ஒன்றில் கடமை புரியும் குறித்த , பெண்மணி கடமை முடிந்து வெளியே வரும் போது தனது கணவனால் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருகையில்,
தெமோதர, உடுவர பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் ஹப்புத்தளை உணவகம் ஒன்றில் கடமை[உரிந்து வருகின்றார். இந்நிலையில் மனைவி கடமை புரியும் ஹப்புத்தளை நகரில் உள்ள உணவகத்திற்கு வருகை தந்த கணவன் உணவகத்துக்கு சென்று மனைவியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் கடமை முடிந்து வெளியே வரும் போது உன்னை நான் கத்தியால் குத்துவேன் என எச்சரித்துவிட்டு, வெளியே வந்த கணவன் மனைவி கடமை முடிந்து வெளியே வரும் வரை காத்திருந்துள்ளார்.
மனைவி வெளியே வந்தபோது அவர் மீது கணவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்த பெண்மணி அயலவர்களின் உதவியுடன் தியத்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் , சந்தேகநபரை ஹப்புத்தளை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.