கடைக்கு முன்னால் நின்றிருந்த நபருக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; சற்று முன் கொழும்பில் சம்பவம்
கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கைப் பகுதியில் இன்று (18) இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடையொன்றின் முன்னால் நின்றிருந்த நபரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்திவிட்டு சந்தேகநபர் தப்பியோடிய போது, அவரது பணப்பை சம்பவ இடத்திலேயே தவறி வீழ்ந்துள்ளதாகவும், அந்தப் பணப்பையிலிருந்த ஆவணங்களின் படி தாக்குதலை நடத்தியவர் கொழும்பு-15ஐ சேர்ந்த 28 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணை
காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.