பிரான்சுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா!
பிரித்தானியா மீதான நடவடிக்கைகளை மேலும் தொடர்ந்தால் பிரான்ஸுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பிரித்தானியா சுற்றுச்சூழல் அமைச்சர் ஜார்ஜ் யூஸ்டிஸ் (George Eustice) எச்சரிக்கை தகவல் ஒன்றை விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான பிரெக்சிட்டிற்குப் பிந்தைய மீன்பிடி உரிமைகள் பிரச்சினை தீவிரமடைந்து இருப்பதை அடுத்து, பிரித்தானியா படகை பிரான்ஸ் சிறைபிடித்தது பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
இதேவேளை பிரான்ஸ் அச்சுறுத்தல்கள் மிகவும் அதிருப்தியளிப்பதாக பிரித்தானியா சுற்றுச்சூழல் அமைச்சர் ஜார்ஜ் யூஸ்டிஸ் (George Eustice) இன்று பிரித்தானியா பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
பிரித்தானியா வர்த்தகத்தை சீர்குலைக்கும் வகையில் பிரெஞ்சு துறைமுகங்களை அணுகுவதைத் தடுக்கும் பிரான்ஸ் அச்சுறுத்தல்கள் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டதில்லை, மேலும் இந்த நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும். பிரான்ஸ் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட படகிற்கு உரிமம் இருந்தது.
இந்த உரிமம் ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கிய பட்டியலில் இருந்தன. எனவே ஐரோப்பிய ஒன்றியம் உரிமம் வழங்கியதாக ஜார்ஜ் யூஸ்டிஸ் தெரிவித்திருந்தார்.
சில காரணங்களால், அந்த உரிமம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கிய பட்டியலிலிருந்து திரும்பப் பெறப்பட்டதாக சில செய்திகளைப் பார்க்கிறோம். உரிமம் ஏன் திடீரென திரும்பப் பெறப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என ஜார்ஜ் யூஸ்டிஸ் (George Eustice) கூறினார்.