திருமண மேடையில் மணப்பெண்ணுக்கு நடந்தேறிய கொடூரம் ; சம்பவம் செய்த முன்னாள் காதலன்
பிகாரில் திருமண மேடையில் மாப்பிள்ளையுடன் நின்றிருந்த மணப்பெண்ணை முன்னாள் காதலன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது.
பிகார் மாநிலம் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பக்சர் பகுதியில் ஆர்த்தி என்பவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த நபருடன் திருமணம் முடிந்தது.

துப்பாக்கிச்சூடு
அன்றிரவு உறவினர்கள் ஆரவாரத்துடன் நடந்த வரவேற்பு நிகழ்ச்சி மேடையில், மணமகன் - மணப்பெண்ணிற்கு குங்குமம் வைக்கும் சடங்கு நடந்தது.
அப்போது திடீரென்று அங்கு வந்த இளைஞர், கையிலிருந்த துப்பாக்கியால் மணப்பெண்ணை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அதில் வயிற்றில் குண்டு துளைத்து மணப்பெண் அங்கேயே சுருண்டு விழுந்தார்.
கண் எதிரே மனைவியைத் துப்பாக்கியால் சுட்டதைப் பார்த்து மணமகன் அரண்டு போக, சுற்றி நின்றிருந்த உறவினர்களும் கதிகலங்கிப் போனார்கள். பின்னர், ஆர்த்தியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தில் ஈடுபட்டவர் மணப்பெண்ணின் முன்னாள் காதலன் என்பதும், அவரது நடவடிக்கை பிடிக்கவில்லை என யுவதி அவரது காதலை சமீபத்தில் துண்டித்தாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தப்பி ஓடிய தீனபந்த்தை பொலிஸார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். ஏற்கனவே அவர் போதைப்பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.