நீரிழிவு நோயை சுலபமாக குறைக்க உதவும் காலை வேளை உணவுகள்
நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க, உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் உணவில் அலட்சியமாக இருந்தால், சர்க்கரை அளவு அதிகரிக்கும். குறிப்பாக ஃபாஸ்டிங்க் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க உணவில் அதிகப்படியான கவனம் தேவை.
இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க காலையில் எழுந்தவுடன் உட்கொள்ள வேண்டிய சில உணவுகளை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
இலவங்கப்பட்டை
நீரிழிவு நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் 1 கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை மற்றும் சிறிது எலுமிச்சை சேர்த்து குடிப்பதால் நன்மை பயக்கும். இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது. மேலும் ஒது நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது.
வெந்தயம் மற்றும் சீரகம்
நீரிழிவு நோயாளிகள் வெந்தய நீரையும் சீரக நீரையும் மாறி மாறி குடிக்கலாம். சீரக நீர் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக அளவில் நன்மை பயக்கும். வெந்தயம் மற்றும் சீரக நீரை உட்கொள்வது ஃபாஸ்டிங்க் சுகர் அளவை வெகுவாக குறைக்க உதவுகிறது. இவற்றில் உள்ள நார்ச்சத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.
நெல்லிக்காய்
நீரிழிவு நோயாளிகள் 100 மில்லி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகருடன் சுமார் 30 மில்லி நெல்லிக்காய் சாறு அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இந்த கலவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
முட்டைகள்
நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டை சிறந்த காலை உணவாக பார்க்கப்படுகின்றது. இதில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இது உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. மேலும் இது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. ஆகையால் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
மேலே உள்ள உணவுகளைத் தவிர, நீரிழிவு நோயாளிகள் காலை உணவில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதில் முட்டை, தயிர், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவையும் அடங்கும். இது உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.