இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கபட்ட சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டனர்! எஸ்.கஜேந்திரன்
கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக இருக்கும்போதே இறுதி யுத்தக் காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் காணாமாலக்கப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (05) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே செல்வராசா கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் பாராளுமன்ற கூறுகையில்,
இராணுவத்தினரின் பேச்சை நம்பி 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி அவர்களிடம் சரணடைய சென்ற பல பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களுக்கு என்ன நடத்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். மேலும் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்தபோதே குறித்த சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டனர்.
அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்காவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு தனது பேரப்பிள்ளையை கொஞ்சி தூக்கி மகிழ்ந்ததை சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆனால் இலங்கையில் தற்போது காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளின் தந்தைகள் கண்ணீரோடு வாழ்ந்து வருவதோடு தனது பிள்ளைகளை தேடி வருகிறார்கள்.
காணாமலாக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என செல்வராசா கஜேந்திரன் எம்.பி. சபையில் தெரிவித்தார்.