யாழில் சிறுவர்கள் கைதான விவகாரம்; வெளியான பின்னனி!
யாழ்.நாவாந்துறையில் கைதான 11 சிறுவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த சம்பவத்திற்கான காரணம் வெளியாகிய்யுள்ளது.
கடந்த திங்கள் கிழமை யாழ்.நாவாந்துறையில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருந்த குறித்த சிறுவர்களிடையே ஓட்ட எண்ணிக்கையை மாற்றிச் சொன்னதால் எழுந்த முரண்பாடு மோதலாக மாறியதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து அங்கிருந்த கிரிகெட் விக்கெட்டுகளினால் சிறுவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தில் சிறுவர் ஒருவர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதனடிப்படையில் கடந்த 3ம் திகதி, 4 சிறுவர்களை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விக்கெட் கட்டைகளால் மோதலில் ஈடபட்டதாக பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மூவர் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த யாழ் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பிணை முறியில் கையொப்பமிட்டு விடுவிக்க உத்தரவிட்டார்.
அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று மேலதிக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களையும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பிணை முறியில் கையொப்பமிட்டதன் அடிப்படையில் விடுவிக்க மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் உத்தரவிட்ட நிலையில் சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்தி
யாழில் சிறுவர்கள் பத்துப் பேர் கைது! அதிர்ச்சியில் பொதுமக்கள்