லண்டனில் தாய்ப்பாசத்திற்கு ஏங்கிய காதலன்: காதலினின் செயலால் வியப்பில் பலர்!
லண்டனில் காதலன் தாய்ப்பாசத்தால் ஏங்கக்கூடாது என்பதற்காக காதலி காதலனின் தந்தையை திருமணம் செய்து கொண்டு வினோத சம்பவம் ஒன்று பலரையும் வியக்க வைத்துள்ளது.
குறித்த பெண் காதலித்த காதலன் தாய்ப்பாசத்தால் ஏங்கக்கூடாது என காதலனின் தந்தையை திருமணம் செய்து கொண்டு தாயாகவே மாறியுள்ளார்.
மேலும் இது குறித்து தெரியவருவது,
இந்தப் பெண் பல வருடங்களாக ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் அந்தக் காதலனின் தாய் திடீரென மரணமடைந்துள்ளார். இந்நிலையில் இதனால் அந்தக் காதலன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
காதலனின் சோகத்தை நீக்க அப்பெண் அதிரடியாக முடிவு ஒன்றை எடுத்துள்ளார். காதலனின் தந்தையை திருமணம் செய்து கொண்டு, தனது காதலனுக்கு அம்மாவாகவே மாறி விட்டார். இது குறித்து தனது டிக்டாக் பக்கத்தில் அப்பெண் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த டிக்டாக் பக்கத்தில், என் காதலரின் அம்மா சில தினங்களுக்கு முன் மரணமடைந்துள்ளார். என்னுடைய காதலர் அவரின் தாயார் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். அம்மா இறந்த துக்கத்தை என் காதலானால் தாங்கி கொள்ள முடியவில்லை.
இதேவேளை தாய் பாசத்தை இழந்து காதலன் கஷ்டப்படுவதை காதலியால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. காதலனுக்கு தாய் பாசத்தை கொடுக்க உண்மையான தாயாகவே மாற முடிவுசெய்துள்ளார். காதலனின் தந்தையிடம் பேசி அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதன்மூலம் காதலன் இழந்து தவிக்கும் தாய் பாசத்தை நான் மீண்டும் அவருக்குக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு அவரின் மகிழ்ச்சி ரொம்ப முக்கியம் என உணர்ச்சிப்பூர்வமாக அப்பெண் பதிவிட்டுள்ளார்.