பட்டம் விடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்: சோகத்தில் குடும்பத்தினர்
தம்புத்தேகம குருகம பிரதேசத்தில் பட்டம் விடச் சென்ற சிறுவன் ஒருவன் கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளான்.
9 வயதுடைய சமீர பிரசாத் ரத்னாயக்க என்ற சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
நாள்தோறும் காலை வேளையில் பட்டம் விட வயல் வௌிக்கு செல்வதை வழமையாக கொண்டிருந்த சமீர வழமை போல இன்றும் சென்றுள்ளார்.
பிள்ளை பல மணி நேரமாகியும் வீடு வராததால் குழப்பமடைந்த பெற்றோர் அவரை தோடி சென்றுள்ள நிலையில், பட்டத்தின் நூலினை கண்டு உடனடியாக கிணற்றை சோதனை செய்தனர்.
பின்னர் கிணற்றில் இறங்கி பார்த்த போது, சிறுவன் சுமார் 20 அடி ஆழத்தில் சிக்குண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.
அதனை தொடர்ந்து சமீரவை தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.