யாழில் பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த ஆண் சிசு
யாழ். புத்தூர் நாவக்கிரி பகுதியில் பிறந்து 30 நாட்களான குறித்த குழந்தை இன்றைய தினம் (27-01-2023) தாயாரிடம் பால் அருந்திக் கொண்டிருந்தபோது புரக்கேறியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
புத்தூர் நவக்கரி மாதா கோவிலடியை சேர்ந்த நிசாந்தசிறி என்பவரின் மூன்றாவது ஆண் குழந்தையே தாயிடம் பாலருந்தி கொண்டிருந்த போது திடீரென புரக்கேரியுள்ளது.
இதனையடுத்து அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குழந்தை இவ்வாறு உயிழந்துள்ளது.
குழந்தை பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாளைய தினம் 31-ஆம் நாள் நிகழ்வுகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த வேளையில் குழந்தையின் உயிரிழப்பு அவர்களது குடும்பத்தை பாரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.