காணாமல்போன ரயில்வே ஊழியர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்
காணாமல் போன ரயில்வே ஊழியரின் சடலம் மாளிகாவத்தை ரயில்வே பாதையிலுள்ள உள்ள கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவருடன் பணிபுரியும் ஏனையவர்கள் மேற்கொண்ட தேடுதலின் போது தெமட்டகொட புகையிரத நிலையத்தில் உள்ள கிணறு ஒன்றிற்கு அருகில் அவரது என சந்தேகிக்கப்படும் பணப்பை, கையடக்க தொலைபேசி மற்றும் ஒரு ஜோடி காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் ரயில்வே அதிகாரிகளும் பொலிஸாரும் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்து புகையிரத ஊழியர்கள் 05ஆம் திகதி திங்கட்கிழமை காலை தமது கடமைகளை விட்டு வெளியேறியதையடுத்து ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.