யாழ்.கடற்கரையில் அடுத்தடுத்து கரையொதுங்கும் உடல்கள்! அதிர்ச்சியில் மக்கள்
வல்வெட்டித்துறை மணல்காடு பகுதிகளில் இன்றும் ஓர் உடல் கரையொதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்.வல்வெட்டித்துறை மணல்காடு பகுதியில் ஏற்கனவே நேற்றைய தினம் இருசடலங்கள் கரையொதுங்கிய நிலையில் இன்றும் ஒரு சடலம் குறித்த பகுதியில் கரையொதுங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இன்று கரையொதுங்கியவரின் உடல் யாருடையது என்பது இது வரையில் அடையாளம் காணப்படாதமையால் சந்தேகம் நிலவுகின்றது.
இதேவேளை, யாழ்.வல்வெட்டித்துறை மற்றும் மணல்காடுப் பகுதிகளில் நேற்று இரு உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் கரையொதுங்கியது குறிப்பிடத்தக்கது.
இதனையத்து, தற்போது இன்று கரையொதுங்கிய உடலும் மிகவும் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.