கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு
திருகோணமலை கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கும் முகமாக, கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
சிவில் சமூகம் இணைந்து கடைகள், பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, வெள்ளை நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டு உயிரிழந்தவர்களுக்காக துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதன்போது, பிரதான வீதிகள், கடைகள், அரச திணைக்களங்கள், வங்கிகள், வணக்கஸ்தளங்கள் மற்றும் வீடுகள் எனப் பல இடங்களிலும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டன.
குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்கள் உட்பட 6 உயிரிழப்புக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை மக்கள் தெரிவிக்கின்றனர்.
முள்ளிப்பொத்தானை கோட்ட பாடசாலைகளிலும் பாடசாலை இடம்பெறாமல் வெள்ளைக் கொடி பறக்கவிடப்பட்டு, இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அதேவேளை நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த படகு விபத்தனது முழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.