சகோதரரின் உயிரை பறித்த பிறந்த நாள் கொண்டாட்டம் ; தீவிரமாகும் விசாரணை
கடவத்த, இஹல பியன்வில பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கடவத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணை
குறித்த நபர் தனது சகோதரர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த போது, அங்கு ஏற்பட்ட முரண்பாடு முற்றியதன் காரணமாகவே இந்தக்கொலை நடந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்காக கடவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.