தமிழரசுக் கட்சியின் ராஜபக்ச அவதாரம் ; சாணக்கியனை சாடிய பிமல் ரத்னாயக்க
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், தமிழரசு கட்சியிலுள்ள ராஜபக்ச அவதாரம் என நாடாளுமன்ற சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய சாணக்கியன், கடந்த அரசினால் வழங்கப்பட்ட மதுபானச்சாலை அனுமதிப்பத்திரங்கள் பற்றி வெளிக்கொணர்வதாக தேர்தலுக்கு முன்னர் குறிப்பிட்டாலும், பின்னர் அரசாங்கம் மௌனமாக இருப்பதாக குற்றம்சாட்டியதை அடுத்து பிமல் ரத்னாயக்க இவ்வாறு பதிலளித்துள்ளார்.
நீலப்படையணியில் பதவி
சாணக்கியன் 2012ஆம் ஆண்டு வரை நீலப்படையணியில் பதவியில் இருந்த ஒருவர். 2010ஆம் ஆண்டின் பின்னர் தமிழர் ஒருவரால் ராஜபக்சக்களுடன் செல்ல முடியுமா?கருணா, பிள்ளையானால் மாத்திரமே செல்ல முடியும். அவர்களுடன் சென்றவரே இவர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் இழுப்பதற்காக பணம் வழங்கினார். தற்போது கோசமிடும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரணில் விக்கிரமசிங்க 600 மில்லியன் ரூபா வழங்கவில்லையா?
இவர்கள் உண்மையிலேயே மொட்டுக்கட்சிக்கே பொருத்தமானவர்கள். இவர் தமிழரசு கட்சியிலுள்ள ராஜபக்ச அவதாரம் அவருக்கு எந்தவொரு தகுதியும் இல்லை" என தெரிவித்துள்ளார்.