மாணவி மரணத்தை விற்று அரசியல் நடத்தாதீர்கள்; சபையில் பிமல்-சஜித் மோதல்
மாணவி உயிரிழப்பை விற்று அரசியல் நடத்தாதீர்கள் என சபையில் இன்று பிமல் ரத்நாயக்க மற்றும் சஜித்பிரேமதாச காரசார வாத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு கொட்டாஞ்சேனையில் 15 வயதான பாடசாலை மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்டமைக்கு காரணம் , நாட்டில் சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளும்ன்றில் கடுமையாக சாடியுள்ளார்.
சஜித்தை அடக்கிய சபாநாயகர்
இது தொடர்பில் அரச தரப்பு எவ்வாறான நீதியை வழங்கப்போகிறது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இதன் போது குறுக்கிட்ட சபாநாயகர் , மாணவி தொடர்பான விடயத்தை பேசவிடாது எதிர்க்கட்சித் தலைவரை அமருமாறு கூறியிருந்தார்.
ஆளும் தரப்பின் பிரதம அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்துத் தெரிவி்ககையில், குறித்த மாணவியின் உயிரிழப்பை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என ஆவேசமாக பேசியிருந்தார்.
மேலும் மாணவியின் மரணத்தை விற்று அரசியல் நடத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இந்த மாணவியின் விடயத்தை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.