பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இரண்டு முக்கிய போட்டியாளர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 5 தற்போது 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 10 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் யார் வெற்றி போகிறார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஏனென்றால், யார் அந்த வெற்றியாளர் என்று கணிக்கமுடியாத அளவிற்கு அனைவரும் தனித்தன்மையுடன் விளையாடி வருகிறார்கள்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போவது யார் என்று பார்க்க, அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டுள்ளனர். இந்நிலையில், ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது.
இந்நிலையில், 80 நாட்களை கடந்து வலிமையான போட்டியாளர்கள் என்று பேர் எடுத்த அக்ஷரா மற்றும் வருன் இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த டபுள் எவிக்ஷன் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.