அரசாங்கத்திற்கு சஜித் மனைவியினால் ஏற்பட்ட பெரும் நஷ்டம்!!
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது சஜித் பிரேமதாச அமைச்சுப் பதவி வகித்த போது அவரது மனைவியின் அழகு நிலையத்தில் பத்தொன்பது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமித் உடுகும்புர இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம்
வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக 400 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உள்ளக கணக்காய்வு அறிக்கையிலும் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலானி பிரேமதாச அழகு நிலையத்தில் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியைக் கூட செலுத்தவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
You My Like This Video