யாழில் நண்பியின் துரோகத்தால் பலியான குடும்பப் பெண் ; விபரீத முடிவால் கதறும் குடும்பம்
நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாற்றப்பட்ட குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
பண்டத்தரிப்பு - சில்லாலை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
25 பவுண் நகை
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணின் சினேகிதி ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு செலவழிப்பதற்கு பணம் தேவைப்படுவதால் அடகு வைப்பதற்கு என 25 பவுண் நகையை குறித்த பெண்ணிடம் வாங்கியுள்ளார்.
இருப்பினும் அவர் அந்த நகையை திருப்பி கொடுக்காமல் தொடர்ச்சியாக குறித்த பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (16) அந்த நகையை நண்பியிடம் கேட்டுள்ளார்.
அவர் அந்த நகையை வழங்க மறுக்க மனவிரக்தியில் இன்று (17) அதிகாலை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.
இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.