பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி
18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. ப்ளே ஒப் சுற்று இன்று ஆரம்பிக்கிறது. இதன் லீக் சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'ப்ளே-ஒப்' சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில், இதில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடுகின்றன.
இந்த போட்டியிற்கான நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 14 ஓவர் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்று பெங்களூரு அணிக்கு 102 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
102 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 10 ஆவது ஓவர் நிறைவில் 02 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது