லண்டனில் இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்! காப்பாற்ற முயற்சித்த ஆசிரியர்
லண்டனில் கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 18 வயது இளைஞனை ஆசிரியர் ஒருவர் காப்பாற்ற முயன்ற நிலையில், குறித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தென் மேற்கு லண்டனின் Twickenham-பகுதியில் இருக்கும் Richard Upon Thames படாசாலைக்கு அருகில் உள்ள நடைபாதையில் இடம்பெற்றுள்ளது.
இந்த கத்திக்குத்து சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க Hazrat Wali என்ற இளைஞனே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தியில்,
கடந்த செவ்வாய்கிழமை (12) பிற்பகல், Richard Upon Thames பாடசாலைக்கு அருகில் உள்ள நடைபாதையில் நடந்த மோதலில் 18 வயதான Hazrat Wali என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்த மோதலில் போது கத்திகுத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞனை Richard Upon Thames பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் CPR செய்து காப்பாற்ற முயற்சித்துள்ளார். இது சம்பந்தமான காணொளி மற்றும் புகைப்படங்களை யாவரும் சமூகவலைத்தளத்தில் பதிவிட கூடாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளைஞனின் உறவினர் கூறிகையில்,
Hazrat Wali நல்ல பையன், அவர் லண்டனுக்கு படிப்பதற்காக ஆப்கானில் இருந்து வந்துள்ளார். மேலும் இளைஞனின் குடும்பத்தினர் அனைவரும் ஆப்கானில் உள்ளதாக கூறியுள்ளார்.
சம்பவ தினத்தன்று உயிரிழந்த இளைஞனுக்கும், அங்கிருந்த மற்ற நபர்களுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட ஆசிரியர் அங்கு உடனடியாக சென்றுள்ளார். இருப்பினும் வாக்குவாதம் முற்றியதால் அங்கிருந்த நபர்கள் இளைஞனை கத்தியால் குத்தியுள்ளனர்.
இதனால் இளைஞன் கீழே விழுந்துள்ளான். உடனே ஆசிரியர் அவரைக் காப்பாற்ற முயற்சித்த நிலையில் எந்த ஒரு பலனும் இன்றி இளைஞன் உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை.
இதுதொடர்பில் Richard Upon Thames பாடசாலை வெளியிட்ட அறிக்கையில்,
இளைஞனின் மரணத்தைக் கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம், இதேவேளை அவர் Richard Upon Thames பாடசாலையின் மாணவர் இல்லை என்றாலும், இரு இளம் உயிரையும் இழப்பது நம் அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. மேலும் கத்திக்குத்து என்பது லண்டனில் சமீப காலமாக அளவில்லா பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக ரிச்மண்ட் அபான் தேம்ஸ் பள்ளி குறிப்பிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவிக்கையில்,
சம்பவ தினத்தன்று மாலை 4.45மணியளவில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்திக்குத்து இலக்கான இளைஞனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர்.
இருப்பினும் கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளான இளைஞன் 5.54 மணிக்கு இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவரது நெருங்கிய உறவினர்களுக்கு தகவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தென் மேற்கு லண்டனின் Twickenham-பகுதியில் இருக்கும் Richard Upon Thames பள்ளிக்கு அருகில் உள்ள நடைபாதையில் நடந்த இச்சம்பவத்தை ஏராளமான மக்கள் பார்த்துள்ளதாகவும், அதில் சிலர் சம்பவத்தை காணொளி மற்றும் புகைப்படம் எடுத்தாகவும் துப்பறியும் தலைமை ஆய்வாளர் Vicky Tunstall தெரிவித்துள்ளார். இதேவேளை இதுகுறித்து எதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.