சுவிசிலிருந்து வந்தவரால் மட்டக்களப்பில் சலசலப்பு!
மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வர ஆலய வெளிவீதியில் சுவிஸிலிருந்த வந்த ஒருவர் திடீரென பட்டாசுகளை கொழுத்திய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா நோய் பரவல் காரணமாக மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஸ்வர ஆலயத்தின் வருடாந்த திருவிழா இவ் வருடம் இடம்பெறாதென ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது.
எனினும் பூசைகள் மட்டும் திருவிழா குடி சார்ந்த அடியார்கள் ஓரிருவரால் கடந்த ஒரு வாரமாக நடத்திவருகின்றனர். இந்நிலையில் நேற்று இடம்பெற்ற பூசையின்போது ஆலய நிர்வாகத்தினருக்கு தெரியாமல் சுவிஸ்நாட்டில் இருந்து வந்த ஒருவர் பட்டாசுகளை வெளிவீதியில் திடீரென கொழுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அப்பகுதி சுகாதார பரிசோதகர், கொக்கட்டிச்சோலை பொலிசாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து ஆலய தலைவர் சுகாதார பரிசோதகரால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
தற்போதய கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஸ்வர ஆலயம் 15, பேருடன் அன்டியன் பரிசோதனை மேற்கொண்டு ஆலய கொடியேற்றம் உள்திருவிழா செய்வதற்கு சம்பந்தப்பட்ட பிரதேச சுகாதார அத்தியட்சர் ஆலோசனை வழங்கியிருந்தார்.
எனினும் ஆலய வண்ணக்கமார், ஆலய குருமார் இறுதி நேரத்தில் இதற்கு சம்மதம் தெரிவிக்காமையால் இந்த வருடம் வருடாந்த உற்சவம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஸ்வர ஆலய பிரதம குரு சுகயீனம் காரணமாக ஆலய பூசைகளில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.