இரவுவேளை வீடுகளை தட்டும் பட்டிருப்பு வலையகல்விப் பணிப்பாளர்

Batticaloa SLPP Sri Lankan Schools Education
By Sulokshi Apr 10, 2024 05:01 PM GMT
Sulokshi

Sulokshi

Report

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயத்தில் விசித்திரமான விபரீதமான ஒரு வலயக் கல்விப் பணிப்பாளர் இரவுவேளை வீடுகளை தட்டி வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அதிகாரப்பசி, அடாவடித்தனம், பாரபட்சம், பழிவாங்கள்,ஊழல், மோசடி, அரசியல்வாதிகள் பிக்குகளுக்கு அடிவருடுதல் போன்றவை வலயக் கல்விப் பணிப்பாளருடைய இரத்தத்தோடு கூடிய DNA இயல்புகளாகும்.

இரவுவேளை வீடுகளை தட்டும் பட்டிருப்பு வலையகல்விப் பணிப்பாளர் | Batti Educationdirector Knocks Houses At Night

மனநலச்சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவும்

தற்போது இவரது அடாவடி நடவடிக்கைகளாலும், முறைகேடான நடவடிக்கைகளாலும் கணிசமான அதிபர்கள் ஆசிரியாகள், பெற்றோர்கள், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.ஓர் ஆசிரியை டம்மி அதிபரின் அடாவடியால் தீக்குளித்துப்பின் தப்பியுள்ளார்.

அந்த அதிபரை வலயக் கல்விப் பணிப்பாளர் காப்பாற்றி விட்டார். இதனால் பட்டிருப்புத் தேசிய பாடசாலையில் பெற்றோர்கள்,அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள்,நலன் விரும்பிகள் வெளிப்படையாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் குதித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இப்படியும் மனிதா்கள் வாழ்கின்றாா்கள்!

யாழ்ப்பாணத்தில் இப்படியும் மனிதா்கள் வாழ்கின்றாா்கள்!

இந்த ஆர்ப்பாட்டம் அரகலயப் போராட்டம் போல் நீட்சியடையும் நிலை ஏற்பட்டது. இந்த அடாவடியின் பின்னணியில் மட்ட்க்களப்பிய பிரதிநிதித்துவப்படுத்தும் மொட்டுக்கட்சியினர் இருப்பதாக அறியப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும் ஆளுனர் மற்றும் மாகாணத் திணைக்கள அதிகாரிகள் குறித்த பணிப்பாளரை இடம்மாற்றுவதற்கான கடிதத்தினை வழங்கிவிட்டதாக அறியப்படுகிறது.

இதனையறிந்த அல்லது இடமாற்றக் கடிதத்தினைப் பெற்ற  குறித்த நபர்,  தனக்குச் சார்பாக ஆர்ப்பாட்டம் செய்யுமாறு டம்மி அதிபர்களின் வீடுகளுக்குச் சென்று வருகின்றார். 7,8,9/04/2024 திகதிகளில் இரவோடு இரவாக அதிபர்கள் சிலரின் வீடுகளுக்குச் சென்று தனக்காக ஆர்ப்பாட்டம் செய்யுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் கெஞ்சி வருகின்றார்.

களுதாவளை,பெரிய கல்லாறு,மகிழூர் முனை,முனைத்தீவு, செட்டிபாளையம்,பழுகாமம் பாடசாலைகளுக்குரிய அதிபர்களின் வீடுகளுக்குச் சென்று அழாக்குறையாகக் கெஞ்சி வருகின்றார். இவர் எந்த வலயத்திலும் நிலையாகப் பணியாற்றியவர் அல்லர். மட்டக்களப்பு மத்திய வலயத்தில் நிதி மோசடி, மேற்கு வலயத்தில் மோசடிகள் அதிகார துஷ்பிரயோகம், திருமலை வலயத்தில் அதிகார துஷ்பிரயோகம் என்று தொடர் சாதனையை குறுகிய காலத்தில் இவர் நிகழ்த்தியுள்ளார்.

யாழில் இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர் சாணக்கியனின் பயிற்சி முகாமில்! வெடித்தது புதிய சர்ச்சை

யாழில் இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர் சாணக்கியனின் பயிற்சி முகாமில்! வெடித்தது புதிய சர்ச்சை

முன்னாள் ஆளுனர் யகம்பத்,முன்னாள் கல்விச் செயலாளர்களான முத்து பண்டா, பென்னான்டோ, பிக்குகள் ஆகியோரின் அடிவருடியாக இருந்து வலயக் கல்விப் பணிப்பாளர் , தப்பிப்பிழைத்து வந்தார். தற்போதைய ஆளுனரின் அடிவருடியாக மாறுவதற்கு இவர் முயற்சித்தபோதும் அது பயனளிக்கவில்லை. அரசியல்வாதிகள் மேலதிகாரிகளின் கால்களைப் பிடித்தவாறு,அதிபர் ஆசிரியர்களைப்பழி வாங்குவதே இ வரின் தந்திரமாகும். மோசடியால் நியமனம் பெற்ற இவர் தொடர்ந்தும் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றார்.

இவரது போலி நியமனம் தொடர்பாக ஆளுனர் விசாரணைக்கு ஆணை பிறப்பித்தால் சிறைக்குள் இருக்க வேண்டிய ஒருவராவார். ஒரு விசாரணையின் போது முன்னாள் ஆளுனர் யகம்பத்,முன்னாள் செயலாளர் பெர்னனான்டோ சிறீ, மொட்டுக் கட்சிக்காரன் என்பதால், பாதுகாத்துவிட்டார்கள். இவ்விலையில் இப்போதைய ஆளுனர் செந்தில் நடவடிக்கை எடுத்தால் கல்வி சமூகம் நனைமை அடையும் என சமுருக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மொட்டின் தீவிர ஆதரவாளரான குறித்த நபர் எதிர்மறையான செயற்பாடுகளில் வல்லவனாக விளங்குகின்றார். அதுமட்டுமல்லாது இவர் கிஸ்புல்லா, அமிரலி,கருணா, வியாழேத்திரன், சந்திரகுமார்,பிள்ளையான்,சைக்கிள் சுரேஷ், ஜனா ஆகியோரின் சகாவாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சாணக்கியனின் ஆதரவாளன் போன்றும் நடித்து வருகின்றார். தற்போது அவர்களில் சிலர் நம்ப முடியாதவர் என்ற வகையிலும்,மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சியும் குறித்த நபரை கைவிட்டுள்ளதாக அறியப்படுகிறது. அதேவேளை கோட்டக்கல்வி அதிகாரி சீருடை வழங்கலுக்கான கூட்டம் என்று அதிபர்களை அழைத்து விட்டு, குறித்த நபருக்கு ஆதரவாகக் கையொப்பம் பெறுவதற்கு முயற்சி எடுப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது அதிபர்களை நிர்ப்பந்திக்கின்ற அடிப்படை மனித உரிமைமீறலாகும்.அதோடு இந்த செயல் அதிகார துஷ்பிரயோகமாகும். நெறிபிறழ்வான மனிதர்கள் இருக்க வேண்டிய இடம் கல்வி அலுவலகங்கள் அல்ல. மனநல வைத்தியசாலைகள் தான். அரசியல்வாதிகள், மேலதிகாரிகளுக்கு அன்பான வேண்டுகோள் என்னவென்றால், குறித்த நபரை எந்த அலுவலகத்துக்கும் அனுப்பி உத்தியோகத்தர்கள் மக்களைக் குழப்ப வேண்டாம்.

மனநலச்சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவும்.அதிபர்களே ஆசிரியர்களே பெற்றோர்களே மாணவர்களே போலிகளை அசல் என்று நம்பி ஏமாற வேண்டாம். ஆர்ப்பாட்டத்திற்குத் துணை போய் அடாவடியர்க்கு அடிவருடியாக மாற வேண்டாம் எனவும் மட்டக்களப்பு சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்,

2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US