பதுளை-கொழும்பு பிரதான வீதியில் பயங்கர விபத்து: ஆபத்தான நிலையில் பயணிகள்
பதுளை - கொழும்பு பிரதான வீதியான எல்ல ஹல்பே பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (12.08.2023) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் எதிரெதிராக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் நான்கு பெண்கள், மூன்றரை வயது சிறுமி மற்றும் இரண்டு ஆண்கள் ஆகியோர் காயமடைற்த நிலையில் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய இரண்டு பேருந்துகளின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.