இலங்கையில் மாவட்டம் ஒன்றில் நிலவும் மோசமான வானிலை... பாடசாலைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!
புத்தளத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளையும் நாளை (21) நாளை மறுதினம் (22) மூடுமாறு வடமேற்கு ஆளுநர் அஹமட் நசீர் வடமேற்கு கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
கடும் மழையால் புத்தளத்தில் பெருமளவான பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், சுமார் 100 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 2 நாட்களுக்கு பாடசாலைகளை மூட வடமேற்கு ஆளுநர் அஹமட் நசீர் தீர்மானித்துள்ளார்.
மேலும், நிலவும் மழையுடனான வானிலையினால் எதிர்நோக்கும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் தமது செயற்பாட்டு அறைக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் வலயத்தில் 213 பாடசாலைகளும் சிலாபம் வலயத்தில் 158 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.