பாட்டியின் மாத்திரையால் பலியான பச்சிளம் குழந்தை
முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை எடுத்து உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று பலியான சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த பாட்டியின் மாத்திரையை யாரும் கவனிக்காத நிலையில் குழந்தை எடுத்து நேற்று மாலை விழுங்கியுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதனை தொடர்ந்து குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்டதனை தொடர்ந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஆரோக்கிய அன்டனி சஞ்யித் எனும் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் சடலம், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.