சட்டவிரோத வைத்தியசாலைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
அனுராதபுரம், ரம்பேவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மேற்கத்திய வைத்திய நிலையமொன்றை நடத்தி வந்த ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓயாமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் ஓயாமடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மகாவிலச்சிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மானிங்கமுவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மேற்கத்திய வைத்திய நிலையமொன்றை நடத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, குறித்த வைத்தியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.