வெளிநாட்டு பயணங்களை தவிருங்கள்: ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக வெளிநாட்டுப் பயணங்களை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அரசாங்க உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு பிரசன்னம் தேவைப்படுவதால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை நேரடி இலக்காகக் கொண்டு அரசியல் வேலைகளைத் தொடங்குவதற்கான ஊஞ்சல் பலகையாக இந்த ஆண்டு மே தின பேரணியை மிகப் பெரிய அளவில் நடத்த ஐக்கிய தேசியக்கட்சி திட்டமிட்டுள்ளது.
பரந்த கூட்டணி
தற்போது, நாடு முழுவதும் தொழில்முறை குழுக்களுடன் கூட்டங்களை நடத்தும் பணியில் அந்தக்கட்சி ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் பல்வேறு கட்சிகள் மற்றும் குழுக்கள் இணைந்து கொள்ளவுள்ள பரந்த கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் பங்கேற்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.