படகில் சென்ற 23 இலங்கையர்களை விமானத்தில் திருப்பியனுப்பிய அவுஸ்ரேலியா
மீன்பிடி படகு மூலம் அவுஸ்ரேலியாவில் தஞ்சம் புகச் சென்ற இலங்கையர்கள் 23 பேர் அவுஸ்ரேலிய கடலோரக் காவல்படையினரால் இன்று நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 27ஆம் திகதி வென்னப்புவ பகுதியில் இருந்து நீர்கொழும்பு மற்றும் மூதூர் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 23 பேர் அவுஸ்ரேலியாவிற்கு பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்கள் இன்று அதிகாலை 03.50 மணியளவில் அவுஸ்ரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதன் பின்னர் விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட அவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.