இரவில் குடிபோதையில் உளறித்தள்ளும் காலாவதியான மனித உரிமை ஆர்வலர்
பிரான்சில் வசிக்கும் தன்னை மனித உரிமை ஆர்வலர் என்று கூறிக்கொண்டு சுற்றித்திரியும் அந்த மனிதர் காலாவாதியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.
மத்தியகிழக்கில் ஒட்டகம் மேய்த்துக்கொண்டு திரிந்த அவர் பிரான்சுக்கு அகதியாகவந்தபோது, அந்த ஆளுக்கு ஓரளவு ஆங்கிலம் தெரியும் என்ற ஒரே காரணத்துக்காக ஜெனிவாவுக்கு அனுப்பிவைத்தார்கள்.
அவரும் மத்தியகிழக்கில் உழைத்ததோடு சரி. ஐரோப்பாவில் ஒரு வேலைக்கும் போனதில்லை.
குளிரிலும் வியர்வையிலும் தமிழ் மக்கள் உழைத்துக்கொடுத்த காசில்தான் மனுசன் வயிறுவளர்த்துவந்தவர்.
பிரான்சில் வெள்ளைக்காரியை வளைச்சுப் போட்டு வீட்டோட மாப்பிள்ளை வேலையையும் 'பார்ட் டைமாகப்' பார்த்துக்கொண்டு திரிந்தார். (இப்ப புல் டைம்)
பரீசில் ஒரு தமிழ் பத்திரிகை அலுவலகத்தில் பதிந்து மக்கள் பணத்தில் கொழுத்த மாதச் சம்பளம் எடுத்தபடி, பல வருடங்களாக அவர் செய்துவந்த வேலை என்ன தெரியுமா?
வருடத்துக்கு இரண்டு தடவை ஜெனிவாவிற்குப் போய், அங்கு புதினம் பார்க்க வரும் நாலு வெள்ளைகளுடன் நின்று போட்டோ எடுத்துவிட்டு, ‘இதோ மடகஸ்கார் ஜனாதிபதி எங்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதாகக் கூறிவிட்டார்.’. ‘அதோ சவுத் ஆபிரக்கா எங்களுக்கு விடுதலை பெற்றுத்தருவதாகக் கூறிவிட்டது..’ என்று கதையளந்து வன்னிக்கு பக்கம் பக்கமாக அறிக்கை எழுதுவார்.
இந்த வேலையை ஏப்பரலில் ஒரு தடவை செய்வார்.. ஆகஸ்டில் ஒருதடவை செய்வார் ரிப்பிட்… ஏப்பரலில் ஒரு தடவை செய்வார்.. ஆகஸ்டில் ஒருதடவை செய்வார்.. ரிப்பிட்..
இப்படி பல வருடங்கள் தமிழ் மக்களை வெற்றிகரமாக ஏமாற்றி வயிறு வளர்த்த பிரகிருதிதான் இந்த காலாவதியான மனித உரிமை ஆர்வலர்.
ஐயாவுக்கு பல பலவீனங்கள் இருந்தாலும் ஒரு பலவீனம் இரவில் மது அருந்துவது..
போராட்டம் தோல்வியடைந்த கவலையாம். (போராட்டம் தோற்று மக்கள் செத்தது ஒருபக்கம் இருக்க, மனுசனுக்கு பிழைப்பு போய்விட்டதல்லோ.. அதுதான் பெரிய கவலை)
குடித்துவிட்டு குப்புறப் படுத்தால் பறவாயில்லை. போதையில் எதையாவது எழுதித்தொலைத்துவிடுவார்.
'தலைவர் இருக்கிறார்' என்று பகல்முழுவதும் வாதிட்டு- வாங்கிற காசுக்கு மேலாகக் கூவித்திரியும் மனுசன், இரவானதும்; ‘தலைவர் இல்லை..’ என்று வட்சப்பில் வந்து எழுதுவார் என்றால் பாருங்கோவன்.
போதை தலைக்கேறி ஐயா விட்ட பகிடிகள் நிறைய இருக்கின்றன.
இப்ப கடைசியா விட்ட பகிடியைக் கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.
ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து யாழ்ப்பாணம் சென்று காசை காலில் போட்டு மித்த சம்பவத்தை ஊடகங்கள் எல்லாம் வெளியிட்டிருந்தனவெல்லோ. அந்தச் சம்பவத்தைப் பதிவிட்ட ஊடகங்களுக்கு எல்லாம் கெட்டவார்த்தைகளில் திட்டிக் கடிதம் அனுப்பியிருக்கிறார் இந்த காலாவதியான மனித உரிமைவாதி.
ஆம் நீங்கள் நினைப்பது சரிதான். இரவில்தான் மனுசன் வாட்ஸ்ஆப்பில் கடிதம் எழுதியிருக்கின்றார்.
மப்பில் தனது சொந்த 'வாட்ஸ் ஆப் ஐடியில்' இருந்தே செய்திகளை அனுப்பித் தொலைத்து மாட்டிக்கொண்டுவிட்டார்.
இப்ப ஐயாவை ஊடகங்கள் எல்லாத் கழுவி ஊத்திக்கொண்டு இருக்கின்றன.
(ஆன்டிக்கு ஒரு சின்ன வேண்டுகோள்: இரவில் மனுசன்ட தொலைபேசியை வாங்கி தலையணைக்கு அடியில மறைத்துவையுங்கோ… ப்ளீஸ்..)