பல் பொருள் அங்காடியில் தாக்கப்பட்ட பிக்கு; சிசிரிவியில் பதிவான காட்சி
சிலாபம் பல்பொருள் அங்காடி ஒன்றில் பெண் ஒருவரை தாக்கிய சந்தேக நபர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் - உட்லண்ட் வத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கடந்த (21.10.2023) சிலாபம் நகரில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்த போது, தனது கையடக்க தொலைபேசியில் காட்சிகள் சிலவற்றை பதிவு செய்ய முயன்றுள்ளார்.
கமராவில் பதிவான காட்சி
அதற்கு அங்கிருந்த பிக்கு ஆட்சேபம் தெரிவித்தபோது, குறித்த நபர் அவரைத் தாக்கி, பிக்குவின் பையில் இருந்த 12,000 யூரோக்கள் உள்ளிட்ட 48 இலட்சம் ரூபா பணத்தை அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
பின்னர், இந்த அசம்பாவிதத்திற்கு முகங்கொடுத்த பிக்கு பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து போலியான இராணுவ பயிற்சி சான்றிதழ், இராணுவத்தினர் பயன்படுத்திய சில ஆடைகள் மற்றும் 2 பொம்மை கைத்துப்பாக்கிகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் சிலாபம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.