இலங்கையில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல்? வெளியான தகவலால் ஏற்பட்ட பரபரப்பு
இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கை கடற்படையினர் முன்னெச்சரிக்கை தகவல் ஒன்றை வழங்கியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து தெரியவருவது,
நாட்டில் உள்ள ஜாஎல போபிட்டிய புனித நிக்கலஸ் தேவாலயத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடக்க போவதாக அந்த தேவாலயத்தின் அருட்தந்தை ஜயந்த நிமலுக்கு இலங்கை கடற்படையினர் முன்னெச்சரிக்கை ஒன்றை வழங்கியிருந்தனர்.
எனினும் கிடைத்த தகவல்களில் கோளாறு இருந்ததைத் தொடர்ந்து இன்று காலை வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கையை இலங்கை கடற்படையினர் வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு தாக்கதல் நடத்தப்படப்போவதாக கிடைத்த தகவல் மற்றும் தேவாலயத்திற்கு வழங்கப்பட்ட தகவல் என்பன பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒரு பிரிவு என்று கூறினார்.
எனினும் நாட்டில் மீண்டுமொரு தாக்குதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.