போலி அரச முத்திரைகளுடன் சிக்கிய ஆசாமி! கூட்டாளியையும் காட்டிக்கொடுத்தார்
அரச இலட்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் போலி முத்திரைகளுடன் தயாரிக்கப்பட்ட போலி விண்ணப்பங்களை வழங்கி இளைஞர்களை தவறாக வழிநடத்தி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர் .
இஸ்ரேல் நாட்டில் தாதி வேலை பெற்றுக் கொடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுவந்த ஏஜென்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பத்தரமுல்ல - தியத்த உயன வளாகத்தில் வைத்து பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மற்றுமொருவர் கைது
கைதான சந்தேகநபர் கட்டணமாக ஒருவரிடமிருந்து தலா 4 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அத்துரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.