இஸ்ரேலின் தலைநகராக மாறும் இலங்கையின் அறுகம் குடா ; சுற்றுலாப் பயணியின் அதிர்ச்சி காணொளி
அறுகம் விரிகுடாவில் இஸ்ரேலிய நாட்டினரின் வருகை அதிகரித்து வருவது குறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
குறித்த காணொளியில் அவர்
50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி
“அறுகம் விரிகுடா இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல் அவிவில் இருப்பது போல் தெரிகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.
அறுகம் விரிகுடா, இஸ்ரேலியர்களுக்கு வழங்குவதாக 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டதா? என்றும் அவர் காணொளியில் கேள்வியெழுப்பியுள்ளார். இந்த காணொளி தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.
இதேவேளை அந்த காணொளியில், எபிரேய மொழி அந்த பகுதியில் உள்ள உணவகங்களில் பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார்.
இதேவேளை, அறுகம் விரிகுடாவில் உள்ளூர்வாசிகளைத் தடைசெய்து இஸ்ரேலியர்கள் நிகழ்வுகளை நடத்தியதையும் அவர் அதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த நிலைமையைக் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.