கொழும்பில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ; தகாத வார்த்தை பிரயோகம்; அருச்சுனா எம்.பி
கொழும்பில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தரை மடையன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காணப்படும் பேருந்து நிறுத்தும் பகுதியில் காரை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியிருந்தார்.
உங்கள் தலையிலா நிறுத்துவது, மடையன்
இதனை அவதானித்த அங்கு கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் , காரை நிறுத்தியமை தொடர்பில் அருச்சுனாவிடம் விளக்கம் கோரியுள்ளனர்.
காரை ஏன் நிறுத்தினீர்கள் என பொலிஸார் கேட்ட கேள்விக்கு 'காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது, மடையன்' என திட்டடிவிட்டு அருச்சுனா எம்பி காரை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகின்றது.
இலங்கை வீதி கோவை சட்டத்துக்கு அமைய பேருந்து நிறுத்துமிட்டத்தில் இருந்து ஒரு வாகனம் சரியாக 20 மீ்ற்றருக்கு அப்பாலே நிறுத்தப்படவேண்டும். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் பேருந்து தரிப்பிடத்திலேயே வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா காரை நிறுத்தியது மாத்திரமல்லாது, கடமையில் ஈடுபட்ட அதிகாரியிடம் முரணாக பதில் வழங்கியமை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் விமர்சங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.