அடிதடியால் அருச்சுனா எம்.பிக்கு சிக்கல்; பொலிஸார் விசாரணை!
யாழ்ப்பாண நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இளைஞன் ஒருவரை பீங்கானால் தாக்கிய சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டதாகக் கூறி இளைஞன் ஒருவர் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சத்திர சிகிற்சை செய்யப்படவுள்ளதாக யாழ். போதானா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
வாக்குவாதம் எல்லை மீறி தாக்குதல்
இராமநாதன் அர்ச்சுனா தனது சட்டத்தரணியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றிருந்தார்.
இதன்போது, ஒரு காணொளி தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதை அடுத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளதுடன், அங்கு பொருத்தப்பட்டிருந்த கெமராவிலும் இந்த பதிவாகி இருந்தது.
சம்பவம் தொடர்பில் காணொளி அடிப்படையாக வைத்து அர்ச்சுனாவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.