குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைதானவர் பிணையில் விடுதலை
கொழும்பில் 2019 ஏப்ரல் 21 தினத்தன்று நட்சத்திர விடுதியான கிங்ஸ்பெரியில் இடம் பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.+
இதில் 3 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிலா மர்சுக் என்ற 8வது சந்தேகநபரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
இதனை கோட்டை நீதவான் திலினி கமகே உத்தரவிட்டுள்ளார்.
பிணை
அத்தோடு அச் சந்தேகநபருக்கு பிணை வழங்க ஆட்சேபனை இல்லை என சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 5 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் அவர் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கிங்ஸ்பெரி விருந்தகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்த நபரின் மனைவியையும் மற்றுமொரு சந்தேகநபரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.