மனைவியுடன் மோட்டார் சைக்களில் பயணித்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த அதிர்ச்சி!
அனுராதபுரம், மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தில்லன்கல்ல பிரதேசத்தில் நேற்றையதினம் (28-05-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் நேரியகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்திருப்பதாக மதவாச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இவர் தனது மனைவியுடன் வயலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும்போது காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.
சம்பவத்தின் போது இவரது மனைவி எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பினார் என்றும் பொலிஸார் கூறினர்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.