அனுராதபுரத்தில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த நபர்!
அனுராதபுரம் - கஹடகஸ்திகிலிய - திவுல்வெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்றைய தினம் (11-07-2023) இடம்பெற்றுள்ளதாக திவுல்வெவ பொலிஸ் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கஹடகஸ்திகிலிய-மஹபொத்தான- பபரஹெல பகுதியைச் சேர்ந்த 33 வயதான சிறிவர்தனகே ஜாதக ஸ்ரீவர்த்தன என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் மாடு மேய்ப்பதற்காக அப்பகுதியிலுள்ள குளத்திற்கு சென்றபோது யானை தாக்கியதாகவும் குறித்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்துள்ளதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கஹடகஸ்திகிலிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் திவுல்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.