முல்லைத்தீவில் மற்றுமொரு பரபரப்பு சம்பவம்!
முல்லைத்தீவு - மாங்குளம் பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த ராமசாமி ராமயி எனும் 70 வயதான மூதாட்டி வீட்டில் சடலமாக கிடப்பதாக கிராமத்தவர்களால் நேற்று (22) மாலை மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
வெட்டு காயங்களுடன் சடலம்
சம்பவ இடத்துக்கு , இன்று (23) காலை கிளிநொச்சி தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலத்தை நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மூதாட்டியிடமிருந்து நகை உள்ளிட்ட பொருட்களை களவாடுவதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.