நாளை முக்கிய அறிவிப்பு: கல்வி அமைச்சு
பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சகம் கவனம் செலுத்துகிறது.
பல கட்டங்களில் கீழ் பாடசாலைகளை மீள திறக்க எதிர்ப்பார்த்துள்ள நிலையில் இது குறித்து நாளை (24) பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து சுகாதார அமைச்சகம் சமீபத்தில் கல்வி அமைச்சிற்கு வழிகாட்டுதல்களை பெற்றுக் கொடுத்திருந்தது. அந்த வழிகாட்டுதல்களின்படி பாடசாலைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மீண்டும் பாடசாலைகளை திறப்பது குறித்து கல்வி அமைச்சர் நாளைய தினம் (23) விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை, பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது உரிய சுகாதார வழிகாட்டுதல்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.