களுவாஞ்சி குடியில் இடம் பெற்ற விபத்தில் முதியவர் பலி
களகளுவாஞ்சிகுடி-கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று (18) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியானதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சக்தி இல்ல வீதி களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை செல்லத்துரை என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார் சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து தேவாலயத்திற்கு வழிபாட்டுக்காக சென்று கொண்டிருக்கும் போது குறித்த வீதியூடாக கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்த பஸ் மோதியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் அவர்கள் சடலத்தினை பார்வையிட்டு பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.