வயோதிப தம்பதியை பலியெடுத்த விபத்து
அநுராதபுரத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபதித் தம்பதியினர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வீதியில் எதிரெதிர் திசைகளில் பயணித்த ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 67 வயதுடைய கணவனும், 64 வயதுடைய மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் என கூறப்படுகின்றது.
விபத்தை ஏற்படுத்திய ஹயஸ் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த வயோதிபதித் தம்பதியினரின் சடலங்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்டு வருகின்றனர்.